
தமிழரசுக்கட்சியினுடைய சிரேஸ்ட தலைவர் மாவை சேனாதிராஜா காலமாகியுள்ள செய்தி தமிழ் தேசிய பரப்புக்கு பெரும் இழப்பாகும்.
இந்நிலையில், அவருக்கு எதிராக மத்தியகுழுவின் 19 உறுப்பினர்கள் முன்னதாக கையொப்பமிடப்பட்ட ஆவணம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பொதுத்தேர்தலின் பின்னர் முதல் முறையாக அக்கட்சியின் மத்தியகுழு கூடிய நிலையில் மாவை சேனாதிராஜா கூட்டத்திற்கு வருவதற்கு தாமதமாகியது.
இதன்போது மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் கோரப்பட்டிருந்தது.
“அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடத்த முடியாது. எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு” இரா.சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்தார்.
இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வழங்கிய விளக்கத்தில்,
“மாவை சேனாதிாஜாவிற்கு எதிராக மத்தியகுழு உறுப்பினர்கள் சேர்ந்து அவர் பதவியிலிருப்பது விருப்பமில்லை என்று கடிதம் எழுதியுள்ளனர்.எனினும்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று வரை மத்திய குழு உறுப்பினர் இல்லை.இருந்தும்
மாவைக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்து குழப்பத்தை ஏற்ப்படுத்தினார்.