
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலர் பிரிவில் வசித்து வரும் மக்கள் கடந்த ஒரு மாத காலமாக மின்சார வசதியின்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலர் பிரிவு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

எனவே, இவ்விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகாரிகளும், விரைவில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.