
பிரித்தானியாவில் “UK” சட்டவிரோதமாக தங்கியிருந்த தமிழர்கள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பல்வேறு பகுதியிலுள்ள ஹோட்டல்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கார் பழுதுபார்க்கும் கடைகள் உட்பட பல இடங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, ஆவணங்கள் இல்லாமல் சுமார் 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 5, 2024 முதல் ஜனவரி 31, 2025 வரை 5,074 கட்டாய நாடுகடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.