
மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இத்தொடரின் இறுதி போட்டி நாளை மறுநாள் (மார்ச் 09) துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளும் பலமான அணி என்பதால் கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், வெற்றி பெற போவது யார்? என்பதில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
டிரா (Draw) ஆனால் என்ன ஆகும்?

இந்த நிலையில், ஒருவேளை போட்டி டிரா ஆனால் என்ன நடக்கும். எந்த மாதிரியான விதியை ஐசிசி வைத்துள்ளது என்பதை நாம் கண்டிபாக தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின.
ஆனால் அப்போட்டி எவ்வித முடிவும் இன்றி மழையால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டது.
அப்படி ஒருவேளை மழை பெய்தாலோ அல்லது போட்டி டிரா ஆனாலோ ஐசிசி விதியின் படி எந்த மாதியான முடிவு எட்டப்படும் என்பதை பார்க்கலாம்.