மட்டக்களப்பு வாகரை எல்லை கிராமமான கட்டுமுறிவை சுற்றி 25-30 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வனத்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மனித உரிமைக்கு எதிரான செயல்களை செய்து மக்களை தாக்கியதால், அப்பகுதி மக்கள் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்று (25.02.2025 )இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தப் பகுதி மக்களின் கஷ்டங்களையும், வேதனைகளையும் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
நேற்று மதியம் 2 மணிக்கு மட்டக்களப்பு வாகரை புச்சாக்கேணி நான்காம் கட்டை பகுதிக்கு சென்ற வனத்துறையினர் நீண்ட நாட்களாக அங்கு வசிக்கும் மக்களை மிரட்டி உடனடியாக வெளியேற சொன்னதோடு, 3 பேர் மீது வழக்கு போட தகவல்கள் சேகரித்தனர்.
இந்த சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்து ஆறுதல் வழங்கியதுடன், இந்த விடயம் தொடர்பில் மக்களுடன் தானும், தமிழரசு கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து பக்கபலமாக இருப்போம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.










இச்சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. நியாயமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். சட்டம் தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கு எப்படி முடியும் என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த சம்பவம் மிகவும் ஆழ்ந்த அக்கறை தேவைப்படுகின்ற ஒன்றாக உள்ளது. சுற்றுலாப் பயணி மற்றும் பெண் இருவருக்கும் ஏற்பட்ட இந்த சூழ்நிலை மனித உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த வழக்கில் நியாயம் கிடைத்ததா என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?