
ஆமதாபாத்: மூன்றாவது ஒருநாள் போட்டியில், விராத் கோலி விஸ்வரூபம் எடுக்க வேண்டுமென இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணி, தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. மூன்றாவது போட்டி இன்று உலகின் பெரிய மோடி மைதானத்தில் (ஆமதாபாத்) நடக்க உள்ளது