
புத்தளத்தில் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தநதை கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.