இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டுக்கள் உடனடியாக மீட்கப்படவுள்ளன.

மேஜர் தரத்திற்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தமது கடவுச்சீட்டுக்களை அவரவர் படைப்பிரிவுகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் தூர இடங்களில் பணிபுரிவதால், கடவுச்சீட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கம குறிப்பிட்டார்.

இராணுவ வீரர்கள் எந்த நேரத்திலும் தங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கடவுச்சீட்டுகளைப் படைப்பிரிவுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று இராணுவப் பேச்சாளர் கூறினார்.

மேலும், இந்நடவடிக்கை நிர்வாக காரணங்களுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்-புதிய முன்னேற்றங்கள்

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் — புதிய முன்னேற்றங்கள் யாழ்ப்பாணம் அருகே…

    மேலும்...

    லண்டன் பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட துயரம்???

    யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து நடத்துனருக்கு…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *